தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி காட்டமான விமர்சனங்களை செய்துவரும் சுசித்ரா முன்பு மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தார்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் சுசித்ரா இப்போது பூர்ணிமாவை அவரை செயல் ஒன்றுக்காக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் “சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயாவும் பூர்ணிமாவும் நெருக்கமாக உக்கார்ந்து இருந்தாங்க. அப்போ பூர்ணிமா தன்னோட ப்ரைவேட் பார்ட்ல கைவச்சிருந்தாங்க. சின்னக் குழந்தைங்க எல்லாம் இந்த நிகழ்ச்சிய பாக்குறாங்க. இதெல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு” எனக் கூறி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
