ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியை அடுத்து மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஆக்ஷன் சாகச படத்தை உருவாக்க உள்ளார்.
இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி உருவாகியுள்ளார். அவர் இயக்கியுள்ள நான் ஈ, பாகுபலி இரண்டு பாகங்கள் மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் பேன் இந்தியா லெவலில் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து அவர் மகேஷ் பாபுவை வைத்து இண்டியானா ஜோன்ஸ் பாணியில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கான திரைக்கதை பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜமௌலி இப்போது ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரமோஷனுக்காக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
