Sunday, May 12, 2024
Home > Cinema > விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது !! காதலால் வந்த சிக்கல்!! அதிர்ச்சி தகவல்

விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது !! காதலால் வந்த சிக்கல்!! அதிர்ச்சி தகவல்

மின்சார கனவு, ஊரு விட்டு ஊரு வந்து, அஜித்தின் வாலி, விமலின் மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட சில படங்களில் நடித்த தேவிப்பிரியா சினிமாவில் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால் சீரியல்களில் வில்லியாக நடித்து ஒரு கலக்கு கலக்கினார். அவர் நடித்த பல சீரியல்கள் வெற்றிபெற்ற சீரியல்களாக அமைந்தன.

தெக்கத்திப் பொண்ணு, அத்திப் பூக்கள், ஆசைகள், சித்தி, அச்சம் மடம் நாணம், சொர்க்கம் என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள தேவி பிரியா, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். சிம்ரன் மற்றும் நதியா உள்ளிட்ட நடிகைகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். சினிமாவில் தன்னால் பெரிய நடிகையாக வர முடியாததற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைதான் காரணம் எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி அவர் “சினிமாவில் சிறு வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் கூட அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். எல்லா ஆடிஷன்களும் முடிந்தாலும் கடைசியில் அட்ஜஸ்ட்மெண்ட் எனும் ஆப்ஷனை தாண்டினால்தான் ஹீரோயினாக முடியும். ” எனக் கூறியிருந்தார்.

`

இந்நிலையில் தேவி பிரியா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “தேவி பிரிய இளம் வயதில் ஒருவரை காதலித்தார். அவருடைய அம்மா சென்னை மாநகர உறுப்பினராக இருந்த அரசியலில் பெரும்புள்ளி. தேவி பிரியா தன்னுடைய மகனை காதலிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

```
```

நடிகை தேவி பிரியா தன் காதலருடன் லிவ்யின் உறவில் இருந்தார் . ஆனால் தேவி பிரியா அவரை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.  தன் மகனை பிரிய சொல்லி அந்த தாய் தேவி பிரியாவை மிரட்டியுள்ளார். ஆனால் அதை அவர் கேட்காததால் அவரை திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்கவைத்துள்ளார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் போராடி தன்னை நிரபராதி என நிரூபித்த பின்னர்தான் ரி எண்ட்ரி கொடுத்து தேவி பிரியா சீரியல்களில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.