தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இப்போது ஐஸ் கிரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒன்றில் நடித்திருக்கிறார். தன்னுடைய வாளிப்பான மேணியழகைக் காட்டும் பிகினி ஆடையணிந்து அவர் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்துக்காக அவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரு படத்திற்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா . இப்போது விளம்பரங்களுக்கு 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெற்றுவருகிரார்.
