Friday, May 3, 2024
Home > Cinema > பொன்னியின் செல்வன்: யார வேணாலும் மாத்துவேன்… ஆனா அந்த வேடத்துல அவருதான்…. உறுதியாக இருந்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன்: யார வேணாலும் மாத்துவேன்… ஆனா அந்த வேடத்துல அவருதான்…. உறுதியாக இருந்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன்: யார வேணாலும் மாத்துவேன்… ஆனா அந்த வேடத்துல அவருதான்…. உறுதியாக இருந்த மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ரிலீஸாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடி வருகிறது.

`

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.

```
```

ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. 6 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலமாக கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் தேர்வு சிலாகிக்கப்படுகிறது. மணிரத்னம் ஒவ்வொரு முறை இந்த படத்தை எடுக்கலாம் என முடிவு செய்யும்போதும் அதற்கேற்றார் போல சில நடிகர்களைத் தேர்வு செய்வார். ஆனால் எல்லாமுறையும் நந்தினி கதாபாத்திரத்துக்கு மட்டும் ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை. ஐஸ்வர்யா ராயை இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.