Saturday, May 11, 2024
Home > Cinema > இரண்டு மகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் இயக்குனர் சங்கர்!! ஷங்கரின் வீட்டில் இவ்வளவோ பிரச்சனையா?

இரண்டு மகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் இயக்குனர் சங்கர்!! ஷங்கரின் வீட்டில் இவ்வளவோ பிரச்சனையா?

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படம் மூலமாக அறிமுகமாகி இப்போது சிவகார்த்திகேயனோடு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர்.

ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார். ஆனால் அவர் நடிக்க வருவது ஷங்கருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஆனால் அவரை எப்படியோ சமாளித்து சில படங்களில் மட்டுமே நடிப்பேன். பின்னர் மறுபடியும் மருத்துவ தொழிலுக்கு சென்றுவிடுவேன் எனக் கூறியுள்ளார் அதிதி.

`

ஆனால் சொன்னபடி செய்யாமல் இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறாராம் அதிதி. அது இயக்குனர் ஷங்கருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஷங்கருக்கு தெரியாமலேயே சில படங்களில் ஒப்பந்தம் ஆகிவருவதாகவும் சொல்லப்படுகிறது. இது ஷங்கருக்கு பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

```
```

அதே போல ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாண்டமாக சில வருடங்களுக்கு முன்னர் பாண்டிச்சேரியை சேர்ந்த தொழிலதிபரான, தாமோதரன் ரோஹித் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே ஐஸ்வர்யா பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டாராம். அதற்கு தாமோதரன் மீதிருக்கும் இருக்கும் சில குற்றச்சாட்டுகளே காரணம் என சொல்லப்படுகிறது.

இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இப்போது சொல்லப்படுகிறது. அதனால் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்போது ஷங்கர் வீட்டில்தான் இருக்கிறாராம். இப்படி இரண்டு மகள்களின் வாழ்க்கையும் தான் எதிர்பார்த்தபடி அமையவில்லையே எனக் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.