கிரிக்கெட் வீரர் தோனி தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணிக்கு பல ஐசிசி உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கபில்தேவுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் சிறந்த ஒரு கேப்டனாக செயல்பட்டார். அதே போல அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் கேப்டனாக செயல்பட உள்ளார்.
ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு திரைபடமாக எடுக்கப்பட்டு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் இப்போது தோனி சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்க உள்ளார். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ள அவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
தமிழில் தோனி விஜய் நடிக்கும் அவரின் 70 ஆவது படத்தை தயாரிக்க தோனி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தோனியின் ராசியான எண் 7 என்பதால் ‘விஜய் 70’ படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் சுதீப் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.