Thursday, May 2, 2024
Home > Cinema > கௌதம் மேனனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் போன தனுஷ்… காரணம் என்ன?

கௌதம் மேனனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் போன தனுஷ்… காரணம் என்ன?

நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த கௌதம் மேனன் தயாரிப்பில் இறங்கிய போது மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அவர் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் கடனுக்கு ஆளானார். அதிலும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

`

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை முழுவதும் முடிக்காமல் எடுத்ததை மட்டும் வைத்து ஒப்பேற்றி படம் முழுக்க வாய்ஸ் ஓவரில் பேசி ரசிகர்களை ஆத்திரமூட்டினார். அந்த படத்தில் பாராட்டக் கூடிய ஒரு காட்சி கூட இல்லை.

```
```

இதனால் அந்த படத்தின் கதாநாயகன் தனுஷ் கௌதம் மேனன் மேல் கோபமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கௌதம் மேனனே பகிர்ந்துள்ளார். அதில் “எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸூக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்த தனுஷ் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசாமல் சென்றுவிட்டார். அவருக்கு என் மேல் கோபம் போல” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கௌதம் மேனன் இப்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த மற்றொரு படமான நரகாசூரனின் நிலைமையும் இதுவரை என்ன என்றே தெரியவில்லை.