Wednesday, April 15, 2026
Home > Cinema > கோல்டன் கலர் புடவையில்… வெட்கத்தில் சிவந்த கன்னத்தில் பேரழகியாய் ரித்து வர்மா!

கோல்டன் கலர் புடவையில்… வெட்கத்தில் சிவந்த கன்னத்தில் பேரழகியாய் ரித்து வர்மா!

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.

அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.