பிரபல நடிகை ரீத்து வர்மா, தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.
`
தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.
சமுகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரீத்து, அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளன.
``````