வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை திருமணம் செய்துகொண்டு படாத பாடு படும் அவஸ்தையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் சூரி.

அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

சின்னத்திரை பார்ப்பவர்களும், பார்க்காதவர்களும் நன்கு பரிச்சயம் ஆனவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் காதலியாக வருபவர். அந்த சீரியலில் குடும்பப் பாங்கான பெண்ணாக சேலையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

சோஷியல் மீடியாவில் படுதீவிர ஆக்டிவ்வோடு இருக்கும் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது டைட்டான ஜிப் வைத்த டிஷர்ட் போல ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

