வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

2018 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

இவர் 2017 ஆம் ஆண்டு வில்லன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் மேதாவி, ஷைத்தான் க பச்சன் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.
அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது. தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சர்தார் படமும் அவரின் ஹிட் பட வரிசையில் இணைந்தது.

எல்லா கதாநாயகிகளையும் போலவும் ராஷி கண்ணாவும் சோஷியல் மீடியாவில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிரும் புகைப்படங்கள் இன்ஸ்டண்ட் ஹிட்டாகி வருகின்றன. அந்தவகையில் உள்ளாடை எதுவும் அணியாமல் வெறுமனே வெள்ளைக் கோட் மட்டுமே அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
