நடிகைகள் தங்கள் தொழிலில் நீண்டகாலம் நிலைத்து நிற்பதற்கு தங்கள் உடல் அழகைக் கட்டுக்கோப்பாக பேண வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. இதற்காக அவர்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஜிம் வொர்க் அவுட் போன்றவற்றை கடினமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பொலிவை இழக்காமல் இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங். கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி தெலுங்கு, இந்தி என சுற்றி வந்து கடைசியில் தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.
தமிழில் ஆரம்பமே அவருக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
வளர்ச்சிப் பாதையில் சென்ற அவருக்கு மிகப்பெரிய இறங்குமுகமாக போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் இப்போது கோட் சூட் அணிந்து மிரட்சியான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. உடலழகை கச்சிதமாக பேணுவதில் வல்லவரான ரகுல் ப்ரீத் சிங் நெஞ்சழகைக் காட்டும் விதமாக இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.