நடிகை பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.
மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

எல்லா நடிகைகளையும் போலவே இவரும் சோஷியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அப்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அந்த வகையில் இப்போது அவர் பட்டுப்புடவை எல்லாம் அணிந்து மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் ஜெர்க் ஆகிவிட்டனர். ஆனால் அவருக்கு கல்யாணம் இல்லையாம். அவரின் சகோதரருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அந்த நிகழ்வில்தான் பட்டுப்புடவை அணிந்து இந்த புகைப்படங்களை பூஜா ஹெக்டே எடுத்துக் கொண்டுள்ளார்.




