தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. ஓவியா 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.
இவர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் களவாணி படங்களில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.
இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது பின்னர் வெளியே வந்ததும் இவர் 90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.இதற்காக இவர் பல விமர்சனங்களை பெற்றார்.
இப்போது அவர் கைவசம் பெரிதாக படங்கள் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் அவரிடம் “நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என சொல்லப்படுகிறதே அது உண்மையா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “துரதிர்ஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை. நான் ஸ்ட்ரெயிட்தான். அப்படிதான் இதுவரை உ டலு றவு வைத்துக்கொண்டுள்ளேன்.” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவரின் இந்த தைரியமான கருத்துகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தாலும், பலரும் இன்னும் திருமணம் ஆகாத ஓவியா எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளலாம், அதையும் வெளிப்படையாக சொல்லலாம் என விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர். இன்னும் இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் இப்படி வெளிப்படையாக கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!