தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மர்மநபர் “மாறன் படத்தில் தனுஷோடு நெருக்கமாக இருக்கும் காட்சியின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து, இந்த காட்சியை எத்தனை முறை எடுத்தீர்கள்” எனக் கேட்டார். அவருக்கு கோபத்துடன் பதிலளித்த மாளவிகா “உங்கள் தலைக்குள் இருப்பது ஒரு சோகமான இடம்” எனக் கூறி பதிலளித்துள்ளார்.

