Sunday, May 12, 2024
Home > Cinema > முதல் ல நா அப்புறம் மூணு பேரு பண்ணுவாங்க !!அட்ஜஸ்ட் பண்ணனுமாம்…  நடிகை ஜீவிதா பகீர் தகவல்

முதல் ல நா அப்புறம் மூணு பேரு பண்ணுவாங்க !!அட்ஜஸ்ட் பண்ணனுமாம்…  நடிகை ஜீவிதா பகீர் தகவல்

சினிமா உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான இடமாகதான் இருக்கிறது. சமீபத்தில் இந்திய சினிமாத்துறையில் பரவிய மீ டு இயக்கமே அதற்கு சான்று. இதில் பல பெண்கள் தாங்கள் யார் யாரெல்லாம் தங்களை பாலியல் ரீதியாக அத்திமீறினார்கள் என வெளிப்படுத்தினர்.

அதில் பலர் நாம் லெஜண்ட்களாக கொண்டாடப்படும் கலைஞர்களும் இடம்பெற்று வந்தனர். தமிழ் சினிமாவில் அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாடல் ஆசிரியர் வைரமுத்து, பாடகர் கார்த்தி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல்களில் கூட இந்த பிரச்சனை உள்ளதாக பல சீரியல் நடிகைகளும் இப்போது வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சீரியல் நடிகையான ஜீவிதா தான் சினிமாவில் நடிக்க முயன்ற போது எதிர்கொண்ட பிரச்சனை குறித்து இப்போது பேசியுள்ளார்.

`

அதில் தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசினர். அதில் நான் அந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் மூன்று பேரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என சொன்னார்கள்.  அதில் இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என அடுத்தடுத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டுமாம். அவர்கள் ஒவ்வொருவராக என் அறைக்கு வருவார்களாம்.

```
```

அதுமட்டுமில்லாமல் ஒருமுறையோடு நிற்காமல் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் அறைக்கு வருவார்களாம். அவர்களை அட்ஜஸ்ட் செய்தால் எனக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள். அதற்காக எனக்குப் பேசப்பட்ட சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளமாக தருவதாகக் கூறினார்கள்.” எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த மூன்று பேர் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால் வெளிப்படையாக தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து ஜீவிதா வெளிப்படையாக பேசியிருப்பது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.