யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. ஆனால் அவருக்கு பிரபலத்தை வழங்கியது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம்தான்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார் .
இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும். ஆனாலும் சினிமாவில் அவரால் பெரியளவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.
இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதற்கிடையில் ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்று இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள சமீபத்தைய புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளன. வழக்கமாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களையே பகிரும் யாஷிகா இந்த முறை ஹோம்லியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.