Sunday, May 19, 2024
Home > Cinema > இன்ஸ்டாவில் மனைவியோடு ரொமான்ஸ் !! ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் .. அந்த நேரத்தில் கையும் களவுமாக சிக்கிய சன் டிவி சீரியல் நடிகர்!!

இன்ஸ்டாவில் மனைவியோடு ரொமான்ஸ் !! ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் .. அந்த நேரத்தில் கையும் களவுமாக சிக்கிய சன் டிவி சீரியல் நடிகர்!!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் வெளியான நூற்றுக்கணக்கான சீரியல்களில் ஒன்று நந்தினி. அந்த தொடரில் மனைவியை தாங்கு தாங்குவென தாங்கும் கணவராக நடித்திருந்தவர் ராகுல் ரவி. சில காட்சிகள் எல்லாம் ஓவர் ஆக்டிங்காக கூட இருந்தாலும், நல்ல கணவர் என்றால் இவரை போல இருக்கவேண்டும் என பெண்கள் சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் அமைந்தது.

இதையடுத்து அவர் லஷ்மி நாயர் என்ற பெண்ணை பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ராகுல் ரவியை ரசித்த ரசிகைகளுக்கு கொஞ்சம் ஷாக்கிங்காகதான் அமைந்திருக்கும்.

`

திருமணத்துக்குப் பின்னர் சீரியல்களில் தொடர்ந்து நடித்த ராகுல், மனைவியோடு படு ரொமான்ஸான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். ஆஹா இவர் சீரியலில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலுமே ஒரு சின்சியரான கணவர்தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

```
```

ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை போல மனைவியோடு இவ்வளவு ரொமான்ஸாக இருந்துகொண்டே, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை எப்படியோ அவரின் மனைவி கண்டுபிடித்துவிட்டார்.

இதையடுத்து லஷ்மி நாயர், ராகுல் ரவி பற்றி போலீஸில் புகார் கொடுத்துவிட்டாராம். இதனை அடுத்து எல்லா ஆக்டிவிட்டீசையும் கைவிட்டுவிட்டு இப்போது ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நல்ல ஒரு வாழ்க்கையை கள்ளத்தொடர்பின் மூலம் இப்படி கெடுத்துக் கொண்டாரே என பலரும் அவரைப் பார்த்து ஆதங்கப் பட்டு வருகின்றனர்.