நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.
இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் கலர்புல்லான உடையில் இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.