ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடியில் ஒருவன் என்ற படத்தை இயக்கி இருந்தாலும், இயக்குனர் ஞான்வேலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது அவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ திரைப்படம்தான். அந்த படத்தில் சூர்யா, மணிகண்டன் மற்றும் லுஜு மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.
இதையடுத்து இப்போது இயக்குனர் ஞானவேல் தன்னுடைய அடுத்த படத்தையும் அமேசான் ப்ரைம் தளத்துக்காகவே இயக்க உள்ளாராம். இந்த படம் தமிழகத்தில் ஹோட்டல் பிஸ்னஸில் கொடிகட்டிப் பறந்த சரவண பவன் அண்ணாச்சியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அண்ணாச்சி மற்றும் ஜீவஜோதி பிரச்சனைகளை ஒட்டியே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு தோசாகிங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.