Sunday, May 12, 2024
Home > Cinema > மனைவியைப் பிரிந்த இயக்குனர் பாலா… இதுதான் காரணமா? பயில்வான் சொன்ன தகவல்!

மனைவியைப் பிரிந்த இயக்குனர் பாலா… இதுதான் காரணமா? பயில்வான் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் நடித்த ஹீரோக்கள் அனைவருக்கும் திருப்புமுனை படமாக பாலாவின் திரைப்படங்கள் அமைந்தன.

அவர் படத்தில் நடித்துவிட்டால் போதும் தங்களுடைய கேரியர் பிக்கப் ஆகிவிடும் என நடிகர்கள் விரும்புவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் சினிமா வாழ்க்கை பின்னடைவை சந்தித்து வருகின்றன. அவர் விக்ரம்மின் மகன் துருவ்வை வைத்து இயக்கிய வர்மா திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கி வெளியிடப்பட்டது.

அதே போல சூர்யாவோடு அவர் இணைந்த வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிடவே இப்போது அருண் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் இப்போது சுமூகமாக இல்லை என சினிமா கிசுகிசு மன்னன் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலா தன்னுடைய மனைவி முத்து மலரை பிரிந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு மிக தாமதமாகதான் திருமணம் நடந்தது. மேலும் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவரை குடும்பத்தினர் வற்புறுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். அவரின் அக்கா மகளான முத்து மலரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

```
```

திருமணத்துக்குப் பிறகு இயக்குனர் பாலா வெகுவாக மாறினார். குடி மற்றும் புகைப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அறிவித்திருந்தார். பாலா மற்றும் முத்துமலருக்கு ஒரு மகள் பிறந்தார். மகளின் வரவு தன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக பல நேர்காணல்களில் கூறியிருந்தார். இப்படி சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை இப்போது விவாகரத்தில் முடிந்துள்ளது.

பாலா, சினிமாவின் மீதே அதிக ஆர்வம் காட்டிக் கொண்டு வீட்டுக்கே வராமல் இருந்ததால் முத்து மலருக்கும் அவருக்கு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறியிருந்தார். பாலாவை பிரிந்த முத்துமலர், இப்போது பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் மகனோடு இணைந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். அந்த நபரும் முத்து மலரும் கல்லூரி காலத்தில் இருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் என்று சொல்லப்படுகிறது.