தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ள பார்வதி நாயர், 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
நடிகை பார்வதி நாயர் படங்களில் பெரிய அளவுக்கு வாய்ப்பில்லை என்றாலும், தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் உள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு பிறகு “உத்தம வில்லன்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்”, போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.இவர் பல படங்களில் திறமையாக நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
இதையடுத்து 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பாப்பின்சு” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் “ஸ்டோரி கதே” படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 ஆண்டு “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
எப்படியாவது வாய்ப்புகளைக் கவரவேண்டும் என்பதற்காக சமூகவலைதளங்களில் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் லோ நெக் ஜாக்கெட் அணிந்து படுத்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகின்றன.