Saturday, May 11, 2024
Home > Cinema > அது கண்ணா இல்ல கரண்ட்டா? ஷாக் அடிக்கும் லுக்கில் அதுல்யா!

அது கண்ணா இல்ல கரண்ட்டா? ஷாக் அடிக்கும் லுக்கில் அதுல்யா!

டிக்டாக்கில் பிரபலம் ஆக இருந்த அதுல்யா ரவிக்கு சினிமா அறிமுகம் 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இவர் பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதிலும் 2 கே கிட்ஸ்களை இவர் வெகுவாகக் கவர்ந்தார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கிய இவருக்கு பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகமானது.

`

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலானவர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். அந்த குறையைப் போக்கவந்தவர்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த அதுல்யா ரவி.  அதுல்யா ரவி,  1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.

இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். பின்னர் இவர் கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

```
```

பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம்,நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். கடைசியாக சாந்தணுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் சிபிராஜோடு வட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் எதுவும் இதுவரை ஹிட் ஆனதில்லை. ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. அத்தனைக்கும் இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் க்யூட் புகைப்படங்கள் தான் காரணம். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.