Saturday, April 20, 2024
Home > செய்திகள் > பாஜக வேட்பாளர் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள்..!

பாஜக வேட்பாளர் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள்..!

19-12-21/13.44pm

கொல்கத்தா : பாஜக வேட்பாளரின் வீடு புகுந்த மமதாவின் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கற்பழிப்பு மிரட்டல் விடுத்ததோடு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கே.எம்.சி வார்டு நம்பர் 92ல் பாஜக சார்பில் சுமன் தாஸ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வீட்டில் புகுந்த திரிணாமூல் குண்டர்கள் அவரது மனைவியை ஒன்பது வயது மகள் கன்னமுன்னரே கற்பழிக்கப்பபோவதாகவும் பின்னர் படுகொலை செயப்பபோவதாகும் மிரட்டியதாக சுமன்தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வார்டு பிஜேபி செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால் அங்கிருக்கும் பல பெண்களுக்கு இதே போல மிரட்டல் விடுத்துள்ளனர் திரிணாமுல் குண்டர்கள். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் பிஜேபி பிரமுகர் வீட்டிற்குள் நுழைந்த திரிணாமூல் குண்டர்கள் அவரது மனைவியை கற்பழித்து படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. மமதா ஆட்சிக்கு வந்த கடந்த 10 வருடங்களாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

`

மேலும் பல பிஜேபி தொண்டர்கள் கொலை செய்யப்படுவதும் அவர்களின் குடும்ப பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிப்போயுள்ளது. விசாரணைக்கு செல்லும் மனித உரிமை கமிஷன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

இந்நிலையில் பிஜேபி தலைவர் மாளவியா ” இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என குறிப்பிட்டார். மேலும் அந்த வார்டுகளில் வசிக்கும் குடும்பத்தினர் ஒரு பதாகையை அடித்து தொங்கவிட்டுள்ளனர். அதில் “திரிணாமூல் குண்டர்கள் எங்கள் வீட்டுப்பெண்களை கற்பழிக்கப்போவதாக மிரட்டுகிறார்கள். மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். அவர்களுக்கு இன்று (19-12-21) பதில் கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளனர்.

……உங்கள் பீமா