இன்று தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களின் 130 ஆவது பிறந்ததினமாகும். தமிழக பிஜேபி தலைவர்கள் மற்றும் தமிழர்கள் பலர் மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் தமிழர்கள் என அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் எந்த கட்சி தலைவர்களும் தமிழனான செண்பகராமன் பிள்ளை அவர்களின் எண்ணற்ற சாதனைகளை எடுத்துக்கூறவோ நினைவுகூரவோ தயாராக இல்லை.
இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டரில் “Remembering ‘Jai Hind’ Senbagaraman on his 130th Birth Anniversary! இங்கிலாந்து, செர்மனியிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்தார். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கி, ‘ஜெய் ஹிந்த்’ என 1933ல் வியன்னா மாநாட்டில் முழங்கிய வீரத்தமிழன் செண்பகராமன் பிள்ளை. இந்தியர்கள் தன்னைத்தானே ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று சொன்ன ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்த தமிழர்!
எம்டன் போர்கப்பல் மூலம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை உட்பட பல இடங்களை தாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிலைகுலைய செய்தவர். ஜெய்ஹிந்த் கோஷத்தை உருவாக்கியவர்
ஆங்கில ஆட்சியை எதிர்த்து காபூலின் ராஜா மஹேந்திர பிரதாபை அதிபராக கொண்டு போட்டி அரசை 1915ல் ஆப்கானித்தானில் நிறுவி வெளிவிவகார அமைச்சராக செருமனி, ஜப்பான் அரச ஆதரவுடன் 1918வரை ஆட்சி நடத்திய வீரத்தமிழன் பிறந்தநாளை (மாநில அரசு) முக ஸ்டாலின் அரசு மறக்கலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
..உங்கள் பீமா