தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் விளங்கியவர் கே வி ஆனந்த்.
`
ஸ்டில் போட்டோகிராபராக இருந்த கே வி ஆனந்த், தென்மாவின் கொம்பத்து என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். அந்த படத்துக்காக அவர் சிறந்த ஒளிப்பதிவாளராக தேசிய விருதும் பெற்றார்.
``````
அந்த படத்தில் மோகன் லால், ஷோபனா மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோருடன் பணியாற்றினார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை ஷோபனா அதிகளவில் மேக்கப் போட்டிக்கொண்டு வந்த போது இவ்வளவு மேக்கப் தேவையில்லை என அவர் சொல்ல, அதனால் ஷோபனா கடுப்பாகி அவரை திட்டிவிட்டாராம்.
பின்னர் இயக்குனர் பிரியதர்ஷன் கே வி ஆனந்த் சொன்னதையே அவரும் சொல்ல, பின்னர்தான் ஷோபனா மேக்கப் இல்லாமல் அந்த படத்தில் நடித்தாராம்.