தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சமந்தா “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது. உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறி இருந்தார்,

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை மோசமாகி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சுத்தமாக குறைந்து அவரால் சுயமாக சில அடிகள் கூட நடக்கமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது மருத்துவமனை சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாகவும், வீட்டிலேயே அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.