Friday, March 29, 2024
Home > Cinema > தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி வசூலா?… பொன்னியின் செல்வன் படைக்கப் போகும் சாதனை!

தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி வசூலா?… பொன்னியின் செல்வன் படைக்கப் போகும் சாதனை!

தமிழ் சினிமாவின் பெருமை மிகு படங்களில் ஒன்றாக உருவாகி வெற்றி வாகை சூடியுள்ளது பொன்னியின் செல்வன்.

`

தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

```
```

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், கேஜிஎஃப் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது பொன்னியின் செல்வன்.

இந்நிலையில் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவீத வருவாயை தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் வசூலித்துள்ளது. இரண்டு வாரத்தில் 180 ரூபாய்  வரை வசூலித்துள்ள படம் இந்த வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.