நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகள் ஆவார. அதுமட்டுமில்லாமல் இவரின் அம்மா மற்றும் பாட்டி இருவருமே நடிகைகள். மகாநடி திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்றதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக ஆனார். இவரின் நடிப்புத் திறமையால் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை வேடத்தில் நடிக்க அழைத்தார்.

முதலில் கவர்ச்சி இல்லாத வேடங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இப்போது மெல்ல மெல்ல கவர்ச்சி ரூட்டுக்கு தாவி வருகிறார். அதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவரின் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இப்போது வித்தியாசமான வெள்ளை உடையில் இருக்கும் அவரின் க வ ச் சி புகைப்படங்கள் ரசிகர்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு படையெடுக்க வைத்துள்ளன.


