Monday, May 19, 2025
Home > செய்திகள் > பட்டாசு கழிவு 48 டன்னாக இருந்து 250 டன்னாக மாறிய மர்மம்..! குழப்பும் சன் செய்தி நிறுவனம்..!

பட்டாசு கழிவு 48 டன்னாக இருந்து 250 டன்னாக மாறிய மர்மம்..! குழப்பும் சன் செய்தி நிறுவனம்..!

7-11-21/10.30am

செய்திகளை முந்தித்தருவதை விட செய்திகளை திரித்து தருவதில் ஊடகங்கள் ஒன்றிற்கொன்று சளைத்ததில்லை என பொதுவான கருத்து பரவும் வேளையில் பட்டாசு கழிவுகள் ஒரே நாளில் 200 டன் அதிகரித்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது சன் செய்தி நிறுவனம்.

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதன் மீதான தடையை நீக்க கோரி தமிழக முதல்வர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினார். ஆனால் தமிழகத்திற்கு எழுதி அனுப்ப மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவுகள் அதனால் ஏற்படும் மாசுகளை விட பண்டிகைக்கு வெடிக்கப்படும் பட்டாசால் ஏற்படும் மாசு மிக மிக மிக குறைவு என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சத்குரு ஜக்கி அவர்கள் ஒரு அறிக்கையில் “மாசு கட்டுப்பாட்டை மனதில் கொண்டு குழந்தைகளின் நலனுக்காக மூன்று நாட்கள் நடந்தே அலுவலகம் செல்லுங்கள்” என கூறியிருந்தார். இந்நிலையில் தீபாவளி அன்று தமிழர்களால் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் கழிவுகள் 48 டன் என சன் நியூஸ் செய்தி வெளியிட்டது.

`

ஆனால் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திர்கையாளர்களிடம் தெரிவிக்கையில் தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகழிவுகள் கடந்த வருடத்தை விட குறைவு என்றும் 250 டன் பட்டாசுக்கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதை சென்னை மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறியதாவது “முதல் நாள் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது. அடுத்த நாள் 100 டன் அகற்றப்பட்டது. 1500 பணியாளர்கள் பட்டாசு கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் என கூறினார்.

```
```

…..உங்கள் பீமா

pattas garbage diwali crackers