தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக அங்கம் வகித்து பல படங்களில் வடிவேலுவோடு இணைந்து நடித்துள்ளார். நடிகர் போண்டா மணி சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழுந்துள்ளதாகவ்ய்ம், அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து இப்போது உடல்நலம் தேறியுள்ளார். அவருக்கு சில நடிகர்கள் பொருளாதார ரீதியாக உதவினர்.
ஆனால் அவருக்கு நெருக்கமாக இருந்த வடிவேலு, போன்றவர்கள் உதவி செய்யவில்லை. அந்த வகையில் சூரியைப் பற்றியும் போண்டாமணி குறை சொல்லியுள்ளார். ஒரு நேர்காணலில் “சூரி சின்ன சின்ன வேலைகள் செய்தபோது அவருக்கு பலமுறை காசு கொடுத்து சோறு போட்ருக்கேன். அவர் வளர்ந்தப்புறம், அவரிடம் வாய்ப்புகள் கேட்டேன். தருகிறேன் தருகிறேன் என சொன்னாரே ஒழிய வாய்ப்புக் கொடுக்கவில்லை. நான் மருத்துவமனையில் இருந்த போது கூட உதவி செய்யவில்லை” என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.