Friday, March 29, 2024
Home > செய்திகள் > நிறுத்தப்பட்ட பேருந்து..! நடவடிக்கையில் இறங்கிய எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ..!

நிறுத்தப்பட்ட பேருந்து..! நடவடிக்கையில் இறங்கிய எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ..!

28-12-21/14.54pm

நாகர்கோவில் : நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பிஜேபி எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி சில வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதை கண்டித்தது மட்டுமல்லாமல் உடனடி நடவடிக்கைகளில் இறங்கினார்.

நாகர்கோவில் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதிக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து 12M என்ற அரசுப் பேருந்து வாடிக்கையாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது ஆறுமாத காலமாக கொரோனா தொற்றை காரணம் காட்டி அரசு அந்த பேருந்து இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதை அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தியிடம் எடுத்துச் சென்றனர்.

`

அதையடுத்து எம்ஆர்.காந்தி அவர்கள் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அவர்களை இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் “நாகர்கோவிலிருந்து பெத்தேல்புரம் செல்லும் 12M அரசு பேருந்து கொரோனா காலத்திற்கு பின்பு சுமார் 6 மாதங்களாக இயக்கப்படபில்லை.

```
```

இதனால் அவ்வழி தடத்தில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுவதால் மீண்டும் அப்பேருந்தை இயக்க இன்று நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அவர்களிடம் கேட்டு கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா